Tuesday, September 14, 2010

அவள்


ஆருயிர் நடுங்கிடும் நொடியினை உணர்ந்தேன்
அவள் கண்களில் கண்ணீரின் அடையாளம் கண்டவுடன்...

காரிருள் கருவில் காயங்கள் இன்றி
எனை காத்தவள் கலங்கினால் கண்ணிருடன்.....

பூவினும் மென்மையை கொண்ட அவள் இதயம்
அது பூ போல் வாடியத்தை கண்டு துடித்தேன்.....

அவள் சிரித்திடும் பொழுது ஆனந்தம் சூழும்
அவள் அழுகையின் வரவை தடுக்க முயன்றேன் ....

அவள் கண்ணீரின் காரணம் நான் என்று உணர்ந்து
என்னையும் என் நிழலையும் ஏற்க மறுத்தேன் ...

அவள் அன்பெனும் வளையில் வளர்ந்து வந்து
இன்று அவள் தோற்பதை கண்டு தவித்தேன் ,துவழ்ந்து அழுதேன் ,மடிந்தேன் ....

Thursday, September 2, 2010

உயிர் பூவே


உயிரால் உன்னை தொடுவேன் அன்பே..
உணர்ந்தால் நெஞ்சை தா இன்றே...

வளர்வேன் உந்தன் வனத்தில் பூவாய்..
நிறைவேன் உந்தன் நினைவில் தேனாய்...

வா என்றதும் வானம் வந்தது..
தா என்றதும் தள்ளி சென்றது..

பூங்காற்றிலே பூ உதிர்ந்தது.....
தரையை சேரும் முன் உன் குழலைச் சேர்ந்தது...

கனம் ஒரு கனம் உன்னை பிரிய வேண்டும்,
உயிரே நீ என்னை தேட வேண்டும்,
உன் விழியில் ஈரம் சேரும் நேரம்,
விண்மீனாய் நேரில் தோன்ற வேண்டும்…

கண்மணியே உந்தன் கரங்கள் பிடித்து,
என் காலங்கள் தான் கடக்க வேண்டும்..

பெண் பூவே , உந்தன் நினைவு கொண்டு,
என் இரவுகளும் கழிய வேண்டும்...

உன் மனம் சொல்கின்ற வார்த்தைகளை,
நான் தினம் உறங்காமல் கேட்டிருப்பேன்..

உன் உயிர் தருகின்ற ஓசைகளை,
நான் எந்தன் உயிரோடு சேர்த்திருப்பேன்..